Monday 19 June 2017



விட்டுச் சென்ற முத்துக்கள் உன் பிள்ளைகள்
எதனைக் கொட்டி கொடுத்தாலும் நீர் வருவீரோ..???
தந்தையே..!!
வெள்ளை மனம் கொண்ட உமது கருப்பு நிழல்கள்
என்னை வாட்டுகிறது...
நீர் இருக்கும் நேரத்தில் நான் உமது பக்கத்தில் இல்லை..
நான் உம்மை நினைக்கும் நாளில் நீர் என் பக்கத்தில் இல்லையே...!!
அய்யா...
மக்களுக்கு நீர் என்றும் தலைவனாய் இருக்கின்றீர்..
நீர் பெற்று எடுத்த மக்களுக்கு தந்தையாய் வரமாட்டீரோ ஒரு முறை...!!
அள்ளி முடிந்த கூந்தல் முடி காத்து கிடக்கின்றது என் அன்னைக்கு..
கொண்டு வரமாட்டாயோ ஒரு முழம் பூ...???
வெட்டி எறிந்த சொந்தங்களும் இன்று ரெக்கை முளைத்து வந்தனவே..
நீர் விட்டு சென்ற எங்களைக் காண ஒரு முறை வரமாட்டாயோ..???
விட்டுச் சென்ற உன் பெயர் எங்களை வாழ வைக்கிறது 
அய்யா...
நீர் குடுத்துச் சென்ற இந்த உதிரம் மட்டும் எங்களைச் சுட்டுப் பொசுக்குகிறது...!!!

கனவில் வந்த நீர் மீண்டும் பிறக்கும் கருவறை எது..!!!???

No comments: