Monday 19 June 2017



அவளை தவறென்று 
சொல்ல முடியவில்லை....

சரி என்று
ஒத்துக்கொள்ளவும் வழி இல்லை....

உண்மையை ஏற்றுக்கொள்ளும் 
வலிமை என் மனதிற்கு இல்லை.....

ஏற்றுக்கொண்ட தனிமை மட்டும்
என்னை விட்டுச் செல்லவில்லை....

பெருக்கெடுக்கும் கண்ணீர் மட்டும்
ஓசை இல்லாமல்....

ஒவ்வொரு இரவும்
என்னைக் கொண்டுச்செல்வது பாலைவனத்தில்....

அங்கும் கண்டேன் 
அவள் பிம்பமாம் கானல் நீரை கனவில்....

இன்றைய இரவு 
அடுத்த பொழுது பிறப்பதற்காக....

இதை தவிர வேறு ஏதும் 
இல்லை என் வாழ்க்கையில் 
நிரந்தரமாய்.....!!!

No comments: