கண்ணிரண்டு கண்டேன்....!!!
எட்டிப்பார்க்கும் எண்ணம் இல்லாமல்
அவளை முட்டி நிற்க்கும் இதயமே.....
சற்று முன் தெரிந்த
ஜன்னல் வழி அவள் பிம்பம்....
கருமை நிற கூந்தல்
அலை அலையாக.....
அவள் பேசுகையில்
கை விரல்கள் தானாகவே நடனம் ஆட....
இதோ இப்போ திரும்பி பார்ப்பாள்
என்று ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்....
முகம் காண ஏக்கம்
அவள் இதழ் காணாமல் இல்லை தூக்கம்....
இடையிடையே அசைந்ந்த அவள் இடை
அடடா எனக்கென்று ஏன் இந்த தடை.....
இதோ வராது இருந்த
மழையும் வந்துவிட்டது.....
சாரல் அவள் கன்னத்தில் பட்டிருக்க வேண்டும்
கொஞ்சம் தள்ளி செல்கிறாள்
என்னையும் விட்டு.....
கை விரல்கள் எட்டிப்பார்த்தது
மழைத்துளிகளை கொஞ்சம் தொட்டுப்பார்த்தது
மழைக்கு அதிர்ஷ்டம் இன்று.....
இதோ மூடப்படுகின்றன
கதவுகள்....
திறந்தது அவள் இதயம்
கண்டேன் அவள் கண்கள் இரண்டை.....!!!!
No comments:
Post a Comment