Monday 19 June 2017



இறுதி சந்திப்பு.....!

உனக்கும் எனக்குமான பிரிவில்,
ஒரு நடைபாதை வழியே என் மனம் செத்துகொண்டிருக்க 
நீ முன்னாடி நடந்து சென்றாய்.....!
உன் பின்னாடி வந்த பொழுதும் 
கடையில் தொங்கிக்கொண்டிருந்த 
உனக்கு பிடித்த அந்த பொம்மை
என் கையில்....!
இறுதி அன்பளிப்பாக அந்த பொம்மை 
பங்கெடுக்க - உன் முகத்தில் இருந்தது 
புன்னகை....!
தவறி விழுந்த பேனாவை எடுப்பதாக - என்
காலில் விழுந்து வணங்கினாய் - செய்த பிழையை 
சரி செய்யவா...?
இல்லை.....
செய்யப்போகும் பிழைக்கு முன்னாடியே செய்யும் பரிகாரமா.....???!!!!!
உன் வீட்டை அடைந்ததும் படிகளில் நின்று 
அழுத என்னை பார்த்து சிரித்தது உன் உள்ளமா இல்லை இதழா....???!!!!!
நீ வென்றுவிட்டாய் என சிரித்தாயோ - இல்லை
நான் உன் சிரித்த முகத்தை மட்டும் ஞாபகத்தில் வைக்க வேண்டும் என்று சிரித்தாயோ.....???!!!!
அன்று முதல் இன்று வரை உன்னை பார்க்கவில்லை....
இனி என்றுமே உன்னை பார்க்க விரும்பவில்லை.....!
கொன்று சென்ற நீ ஏன் என்னை உன்னுடன் கொண்டு செல்லவில்லை.....???!!!!
தினம் அழும் என்னை புரிந்தவர் எவரும் இல்லை....
இனி புரிந்துக்கொள்ளும் ஒரு உறவும் எனக்கு தேவை இல்லை....!!!!
நமக்கான அந்த இறுதி சந்திப்பு கண்களுக்கு மட்டுமே,
இதயத்துக்கு இல்லை....!

No comments: