சரி-பிழை....!
எனக்கென்றே வந்தாள்
பிழையாக்கிச் சென்றாள்...
சந்தம் இல்லாத பாட்டு
என் சொந்தம் ஆனது...
சதி என்னும் இரண்டெழுத்து
கவிதை என் விதி ஆயிற்று...
தள்ளாடி நிற்கும் அடி நெஞ்சம்
அவள் வடு கண்டு அமைதி ஆனது...
அவளை நினைக்கையில் -
விட்டு விட்டு போகும் உயிர்
என்று பிரியுமோ அன்று வருகிறேன் மீண்டும் சரியாக....!!!
No comments:
Post a Comment