எங்கள் தந்தையின் மனைவி...!!!
கோயில் பிரசாதமாய் குங்குமமும் பூவும் இனி என் அம்மாக்கு நான் எப்படி குடுப்பேன்,
அவள் வெள்ளை உடை அணியும்பொழுது...!!!
மஞ்சள் இல்லாத அன்னையின் முகம்..
என் தந்தை இல்லாத இந்த வீடு...
காற்றைடைத்த பையாய் இந்த மனித உருவம்.. வெடித்து சிதறும் தருணம்..
உறவினருகளின் அழுகை.. நண்பர்களின் தனிமை..
பிள்ளைகளுக்கு வெறுமை.. மனைவிக்கு அது தான் கொடுமை...!
என் கண் முன்னே என் தாயின் கொடுமை இது..
தடுப்பார் யாரும் இல்லை.. பொறுப்பதற்கு மனமும் இல்லை...
தாயின் கையிலே தவழ்ந்த நாட்களை விட.. என் தாய் என் கையிலே அடைந்து கதறிய காட்சி என் நெஞ்சுக்குழியில் புதைந்து நிற்கின்றது...
கட்டுண்ட சேலை இனி இல்லை அவளுக்கு கட்டினவன் கொல்லையிலே சென்றதால்...
சத்தமின்றி அழுகின்றாள் தன் கோலத்தை எண்ணி...
அது அவளுக்காக அல்ல... என் தந்தை ரசித்த பூவும் பொட்டும் கூட இன்று தன்னிடம் இல்லையே என்று...
பூமியை பார்த்து வாழ்ந்த அவள் கண்கள்..
இன்று வானம் பார்த்து வாழ்கின்றது என் தந்தையை தேடி...
கை வலை கொஞ்சிட அன்னமிட்டவள்
என் இதயம் கெஞ்சிட
அறியாமல் மௌனமாய் நிற்கிறாள் வெறும் ஜடமாய்...
கன்னம் சிவந்திட சிறிதவள்
கண்களின் வலி தெரியாமல் அழுகிறாள்...
காதல் கொண்ட மனதில் கூடவே காத்திருப்பையும் வைத்து இருக்கிறாள்...
அவள் மரணத்தை நோக்கி...!!!
இந்த பிள்ளைகளின் உள்ளம் காத்திருப்பையும் மீறி கதறுகிறது
இது எங்கள் அன்னை இல்லை,
எங்கள் தந்தையின் மனைவி...!!!
No comments:
Post a Comment