நான் வாழாத போதும்
வாழ்கின்ற உன்னை வாழ்த்தி வருவேன்....
உயிர் போகாத தருணம்
சில நொடி என்றாலும் –
உன்னை மறக்காமல் நினைத்து இருப்பேன்...!!!
புயல் வந்து அடித்து செல்லாத இந்த உடல்
உன் குரல் கேட்காமல் செல்லரித்து போகின்றது...!!!
வயது ஆகின்றது ஒவ்வொரு வருடமும்
நீ என்னை பிரிந்த அந்த நாளுக்கு..
விழியோடு நின்ற வலி இன்று –
இதயத்தோடு புல்லாங்குழல் வாசிக்கின்றது..!!!
இந்த இசை முடியும் நேரம்
உன் இதழ் பிரிந்து வரும் என் பெயராகும் எனில்
இப்போதே முடித்துக்கொள்கிறேன்
என் இதயத்தின் இசையை...!!!
No comments:
Post a Comment