உறுமி........!
ராயரின் உறுமலில்
இவள் மிரட்சியில்
புரட்சியாளனாய் வந்தவன்
இன்னொரு ராயர்......!
கொடுத்துச் சென்ற
உருவம் சிறிது என்றாலும்
விதைத்துச் சென்ற
கர்வம் பெரிது.......!
உருவம் தாய்
கொடுத்தாலும்,
உணர்ச்சி தந்தை
கொடுத்தான்......!
வாள் கூர்மை மட்டும் அல்ல,
இவன் கர்வமும் கூர்மை தான்....!
விட்டுச் சென்றது
பலவீனத்தை அல்ல,
முழு ஆள் பலம் மட்டுமே....!
பலம் வளர்ந்து பாலமானது
தன் சந்ததியர்க்கு
தாய் மண்ணை பாதுகாக்க...!
தாய் பாலூட்டும் பெண் அல்ல,
வீரம் செழிப்பூட்டும் அரக்கால் ஆயிஷா.....!
வாசகொடகாமா இந்திய நாட்டிற்கு
வழி மட்டும் கண்டுபிடிக்க வில்லை...
இந்திய மண்ணின் மற்றும் ஒரு வீர குலத்தை
கண்டுபிடிதவனும் தான்...!
குறு மிளகிற்கு வந்தவன்
கூர் வாள் குத்தி இறந்தான்.....!
உறுமி எத்தனையோ குடுமிகளை
அவிழ்த்து எரிந்தது மட்டும் இல்ல....
இந்திய மண்ணின் உறுதியையும்
விழைத்து சென்றது......!
No comments:
Post a Comment