Monday 19 June 2017



மோதலில் ஆரம்பித்த நட்பு
பகிர்தலில் தொடர்து
புரிதலில் சிலிர்த்து
அறிந்தோம் நமக்குண்டான அன்பை....
மீண்டும் சண்டை வருமா
என்று ஏங்கி சோர்ந்துபோனோம்...
சண்டை வந்தது
விட்டுக்கொடுக்கும் குணமும் வந்தது
சந்தோசித்தோம்....
உன் வரவை நானும்
என் வரவை நீயும் எதிர்பார்த்து
தினம் ஏங்கினோம்....
இரவு உணவு
வெளியில் நிலவு
என்று "நிலா சோறு" சாப்பிட்டோம்....
கண் அயரும் வேளையில்
மிஞ்சிய சில கதைகளை பேசினோம்
உன்னையும் என்னையும் அறியாமல்
உறங்கியும் போனோம்....
காலை நேரம் செல்ல சிணுங்களில்
நேரம் கடந்தது...
உன் அவசர கோலங்களில்
என்னை மறந்து நான் சிரிக்கும்போது
மறக்காமல் என்னை இடித்து செல்வாய்....
அலுவலகம் வந்தும்
நாம் இணைந்து இருந்தது
அலைபேசியில்....
தொடர்ந்து வந்தது
நமது குறுந்தகவல்கள்.....
தங்கம் என்பாய்
செல்லம் என்பேன்....
விஷயம் இருக்காது ஆனால்
பாசம் இருக்கும்....
தவறாமல் கேட்பாய்
சாப்பிட்டாயா என்று....
மாலை நேரம்
மெதுவாய் வரும்
உன்னை பார்க்க மனமோ வேகமாய் ஓடும்....
வாசல் வந்ததும் அழைப்பாணை அழுத்தும் முன்பே
எத்தனை நாள் கதவு திறந்திருப்பாய்....????
எப்படி தெரியும் நான் வந்துவிட்டேன் என்று கேட்டால்
மறுக்காமல் சொல்வாய் அது அப்படி தான் என்று.....
அன்னையாய் மாறி
என்னை அன்பால் உபசரிப்பாயே
எத்தனை கோடி புண்ணியம் செய்தேனோ....!
மீண்டும்
இரவு உணவு
வெளியில் நிலவு
என்று "நிலா சோறு" சாப்பிட்டோம்....!
இதில் எது உனக்குக் கசந்தது
ஏன் என்னை விட்டு பிரிந்தாய்....???!!!
விடை மட்டும் சொல்லிச் செல்லடி
தடை ஏதும் கூறமாட்டேன்....!!!!!!!!!!!







No comments: