வலிக்கின்ற இதயம் வடிக்கின்றது கண்ணீரை...
வடிகட்டியதுபோல் வெறும் வேதனைகள் மட்டும்...
ரத்தமும் சதையுமாய் சில துரோகங்கள்...
ஆங்காங்கே எலும்புக்கூடாய் சில நினைவுகள்...
என்ன இருந்து என்ன, அவை மீண்டும் வரப்போவதும் இல்லை...
நான் மீண்டு வரப்போவதும் இல்லை...
மிச்சமாய் நிற்பது வெறுமை, அத்தோடு ஒற்றை மர நிழலாய் தனிமை...
கண்ணடிக்கு மட்டும் இல்லை சொல்லடிக்கும் தான் சுற்றி போடவேண்டும் தோழமையை...
வெறுத்துச் செல்வதை விட ஒதுங்கி செல்கிறேன்....
No comments:
Post a Comment