Monday 19 June 2017



என்னோடு வரவில்லை அவள்
தன்னோடு கொண்டு சென்றாள் என்னை.....

ஒருமுறை தான் இந்த காதல்
அதுவும் ஏனோ முறை இல்லாமல் போனதே....

நின்று தான் பார்த்தாள்
ஆனால் நிதானிக்க மறந்தாள்....

வாய்மொழி வந்த வாக்கியங்கள் வெறும் 
காகித தீற்றல்கள் ஆனது....

நீரில்லாத பாலைவனமோ 
நிலவில்லாத நீலவானமோ
நீ இல்லாத நானும் வெறும் சோகமோ.....!

சரியாய் ஓடிய கடிகாரம் சட்டென்று செயல் இழந்தது...
அவளை பிரிந்த இதயமோ செய்வதறியாது வேர்த்து நிற்கின்றது....

நூறு ஜென்மமே எனக்குத் தேவை இல்லையே
வேறு காதலும் எனக்குத் தோன்றவில்லையே...

No comments: